செம்பாக்கம் ஏரி மறுசீரமைப்பு செய்யும் பணியில் காக்னிசண்ட் மற்றும் கிரண்ட்ஃபோஸ்

செம்பாக்கம் ஏரி மறுசீரமைப்பு செய்யும் பணியில் காக்னிசண்ட் மற்றும் கிரண்ட்ஃபோஸ்


Source - GRUNDFOS

உலகின் முன்னணி தொழில்முறை சேவை நிறுவனங்களில் ஒன்றான
 காக்னிசண்ட் மற்றும் மேம்பட்ட பம்ப் தீர்வுகள் மற்றும் நீர் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவரான கிரண்ட்ஃபோஸ் இன்று சென்னையில் உள்ள செம்பாக்கம் ஏரியை  மறுசீரமைப்பு செய்வதற்கான நிதி ஆதரவை அறிவித்துள்ளனர்.

காக்னிசண்ட் 2.7 கோடிக்கு மேல் பங்களிக்கும், கிரண்ட்ஃபோஸ் 1.7 கோடி ரூபாயும் அதனுடன் சிவில் பணிகள், கழிவு நீர் சுத்திகரிப்பிற்காக 7.5 லட்சம் ருபையை பங்களிக்கும்.

உலகின் மிகப் பெரிய பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தி நேச்சர் கன்சர்வேன்சியின் இந்தியா அத்தியாயத்துடன் மற்றும்  இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த கேர் எர்த் டிரஸ்ட், பல்லுயிர் பாதுகாப்பு பகுதியில் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பு ஆகியவற்றுடன் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து இத்திட்டத்தில் பணிபுரியும்,

2021 ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த பணியில், உட்புறம் மற்றும் வெளிப்புரங்களை சுத்தம் செய்தல், மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்நிலைகளுடன் ஏரியின் இணைப்பை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் நட்பு கழிவு நீர் சுத்திகரிப்பு முறையை உருவாக்குதல் மற்றும் ஏரியுடன் நடைபாதைகள் மற்றும் பசுமை இடையக மண்டலங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்


Comments

Popular posts from this blog

Indkal Technologies Raises 300 Crores in Series A Funding

#ரத்னம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது